நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.
நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.
இளம் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் உதகையில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் நேற்று தொடங்கியது.

ஒன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு படைப்புகளைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது.
இதில் நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்; இளம் விஞ்ஞானிகளுக்கு அது மிகப்பெரிய உயரத்தை அடைய உதவுகிறது. அறிவியல் கண்காட்சி, வெவ்வேறு துறைகளில் உள்ள திறமைகளை மாணவர்கள் மூலம் வெளி கொண்டு வர வழிவகை செய்கிறது.'' என்றார்.

பள்ளி தாளாளர் உமர் பரூக் பேசுகையில், ''இந்த கண்காட்சியில் தேர்வு பெறும் முதல் மூன்று படைப்புகள், மாநில மற்றும் தேசிய அறிவியல் போட்டிக்கு விரைவில் அனுப்பப்படும்.'' என்றார்.