''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்" - நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா

நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.

இளம் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் உதகையில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் நேற்று தொடங்கியது.



ஒன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு படைப்புகளைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது. 

இதில் நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்; இளம் விஞ்ஞானிகளுக்கு அது மிகப்பெரிய உயரத்தை அடைய உதவுகிறது. அறிவியல் கண்காட்சி, வெவ்வேறு துறைகளில் உள்ள திறமைகளை மாணவர்கள் மூலம் வெளி கொண்டு வர வழிவகை செய்கிறது.'' என்றார்.



பள்ளி தாளாளர் உமர் பரூக் பேசுகையில், ''இந்த கண்காட்சியில் தேர்வு பெறும் முதல் மூன்று படைப்புகள், மாநில மற்றும் தேசிய அறிவியல் போட்டிக்கு விரைவில் அனுப்பப்படும்.'' என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...